ஒருவர் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் மற்றும் எப்படி வாழக்கூடாது என்பதனைப் பற்றிய வாழ்க்கையின் சிறு கருத்து கதைகள்
ஒரு குட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர் அதில் மகிழன் என்பவருக்கு மூன்று ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன . மேலும் அவரது மனைவி பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வந்தனர்.அவரது கணவர் கோயில்களில் பூஜைகள் செய்து வந்தனர் . பின்னர் அவரது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தனர் அதில் முதல் மகனான மூர்த்தி என்பவர் ஒரு டிகிரி முடித்தனர். இரண்டாவது மகனான சூர்யா என்பவர் படிக்கவில்லை மற்றும் மூன்றாவது மகனான வேலன் என்பவரை ஒரு டிகிரி படிக்க வைத்தனர் . பின்னர் மூத்த மகனான மூர்த்தி என்பவருக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது என்று கூரி மூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்.மேலும் அவரது மகன் மூர்த்தி என்பவர் மிகவும் குடிபோதையில் இருப்பவர் என்பது அவரது மனைவிக்கு தெரிய வந்தது பிறகு அவரது மனைவி திருந்த சொல்லி அவரிடம் கேட்டுக்கொண்டார் மேலும் அவர் திருந்தாமல் மேலும் மேலும் குடி போதைக்கு அடிமையாகி விட்டார். இதனை பார்த்து மனம் உடைந்த மூர்த்தியின் மனைவியான செல்வி மூர்த்தியிடம் நான் உன்னிடம் வாழ முடியாது நான் எனது அம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்றார் . பின்னர் மூர்த்திக்கும் செல்விக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது மேலும் அந்த குழந்தையை மூர்த்தி பார்த்துக் கொள்ளவில்லை அந்த மூர்த்தியின் மனைவி செல்விதான் அவர்களது குழந்தையை தனியாக பார்த்து நன்றாக படிக்க வைத்தார். மேலும் மூர்த்தி அவர்கள் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்தார் . பின்னர் ஒரு விபத்தில் அவருக்கு கால் முறிந்து விட்டன . மேலும் இரண்டாவது மகனை படிக்க சொன்னால் படிக்காமல் ஊரை சுற்றிக்கொண்டு காலத்தை கடத்தினார். மேலும் அவருக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தால் இரண்டாவது மகனான சூர்யாவிற்கு திருமணம் செய்து வைத்து விடலாம் அப்போதுதான் அவன் திருந்துவான் என்று யோசித்த மகிலன் சூர்யாவிற்கு திருமணம் செய்து வைத்தனர் . மேலும் சூர்யாவிற்கு வயது அதிகம் என்று தெரிந்தும் சூர்யாவின் வீட்டார்கள் சூர்யாவின் ஜாதகத்தை மறைத்து அந்த சிறிய வயது பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர்,சிறிது மாதம் கழித்து சூர்யாவின் மூத்த அண்ணனுக்கு விபத்து ஏற்பட்டது மேலும் மூர்த்தியின் மனைவியான செல்வி மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு வர மாட்டேன் என்று அழுத்தமா கூறி விட்டார். பிறகு சூர்யாவின் மணைவி சீதா தான் தன் கணவனின் அண்ணனை மருத்துவமனையில் பார்த்துக்கொண்டார் . மேலும் மூர்த்தி குணமடைந்து சூர்யாவையும் சூர்யாவின் மனைவி சீதவையும் சூர்யாவின் குடும்பத்தில் யாரும் அவர்களை மதிக்கவில்லை அவர்களை பார்த்தாலே கேவலமாக பார்ப்பார்கள். மேலும் இதனை எல்லாம் தாங்கிக் கொண்டார்கள் சூர்யாவும் அவரது மனைவி சீதாவும். மேலும் சூர்யா அவர்கள் ஒரு சிறிய தேனீர் வியாபாரம் பண்ணி வந்தார் சூர்யாவும் அவரது மனைவியும் சூர்யாவின் வீட்டில் சாப்பிடுவதற்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆதலால் அவர்கள் அந்த தேநீர் கடையில் வரும் வருமானத்தை முழுவதும் சூர்யாவின் பெற்றோரிடம் கொடுத்து விடுவார்கள் . பின்னர் இது தொடர்ந்து மூன்றாவது மகன் வேலன் என்பவர் அவரது அப்பாவிடம் இவர்கள் இங்கிருக்க வேண்டாம். அவர்களை வெளியே போகச் சொல்லி மிகவும் கொடுமை செய்தனர் இதனை எல்லாம் பார்த்த சூர்யா தனது மனைவியை கூட்டிக்கொண்டு அவர்களது பச்சைக் குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்கு சென்றனர். அவர் ஒரு கடையில் தின சம்பளத்திற்கு வேலை செய்து வந்தனர். மேலும் சூர்யாவின் மனைவி வீட்டில் ஒரு வேலையும் இல்லாமல் அவரது மட்டுமே கஷ்டப்படுகிறார் என்று யோசித்து அவரும் சிறு சிறு வேலைகள் வீட்டிலிருந்து செய்து கொண்டிருந்தார். மேலும் இரண்டு பேருக்கும் இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிறது என்கிற சந்தோஷத்தில் அவர் இன்னும் பணம் சேர்க்க ஆரம்பித்தார். சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் சூர்யாவின் தம்பியான வேலனுக்கு சூர்யாவும் சீதாவும் சந்தோஷமாக வாழ்வது அவருக்கு மிகவும் பொறாமையாக இருந்து வந்தது. பின்னர் என்பவர் வேலன் சூர்யாவிடம் அன்பாக பேசி அவரை அவரது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தார். மேலும் சூரியா அவரது மனைவிடம் கூறினார் .அவரது சகோதரன் தன்னிடம் வந்து கூறியதை பின்னர் சூர்யாவும் சீதாவும் சூர்யாவின் வீட்டுக்கே மீண்டும் சென்றார் . அங்கு அவரது மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார் .மேலும் அவர் வருமானத்திற்காக வெளி ஊருக்கு தங்கும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது சூர்யாவிற்கும் அவரது மனைவிக்கும் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது மீண்டும் அவரது வாழ்க்கையில் சந்தோஷம் நிகழ்ந்தது. மேலும் மூன்றாவது குழந்தை மகனாக பிறந்தது அந்த சந்தோஷத்தில் அவர் வெளியூரில் வேலை பார்த்து வந்தார் மேலும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவரது குடும்பத்தை பார்ப்பதற்காக வருவார். அப்போது அந்த மூன்றாவது மகனான கண்ணன் என்பவருக்கு கண்ணில் பிரச்சனை வந்தது மேலும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை குணமளித்து வீட்டுக்கு கூட்டி வந்தனர் மேலும் சொந்த ஊரில் மகனுக்கு நேரம் சரியில்லை என்று யோசித்து அவர் சூர்யாவின் மாமனார் ஊரிற்கு சென்றனர். பின்னர் அவரது சொந்த ஊருக்கு அவர் வரவில்லை அவரது மாமனார் ஊரிலே அவர் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தார். மேலும் அவரது மாமனார் ஊரிலும் தேநீர் வியாபாரம் செய்தார். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் கடைகளுக்கு வேலைக்கு சென்றார். அவரது இரண்டு பிள்ளைகளும் முதல் பிள்ளையான மேகலா என்பவளும், இரண்டாவது மகளான மஞ்சுளா என்பவளும் சூர்யாவின் சொந்த ஊரில் உள்ள விடுதியில் தங்கி வந்தனர் . மகனான கண்ணன் மட்டும் சூர்யா மற்றும் சீதாவிடம் இருந்து வந்தனர். மேலும் சூர்யாவின் குடும்ப வாழ்க்கைகள் மிகவும் அழகானதாக சென்று கொண்டிருந்தது. மேலும் சீதாவின் அக்காவிற்கு இரண்டும் பெண் குழந்தைகள் அந்த குழந்தையின் அப்பா தனது மனைவியையும், குழந்தையையும் விட்டுவிட்டு வேற ஒரு திருமணம் செய்து கொண்டனர். மேலும் சீதாவின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் காலமாகினார். மேலும் சீதாவின் அக்கா குழந்தைகளை தானே பார்த்துக் கொள்கிறேன். என்று அவர் அந்த இரண்டு பிள்ளைகளையும் கூட்டி வந்து வீட்டில் தனது பிள்ளைகளுடன் அந்தப் பிள்ளைகளையும் நன்றாக வளர்த்து வந்தனர் .நான்கு பிள்ளைகளையும் அவரது சொந்த பிள்ளை என அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தனர் . மேலும் அந்த இரண்டு பிள்ளைகள் முன்னாடியும் தனது பிள்ளைகள் தங்களை அப்பா அம்மா என்று அழைத்தால் அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பா அம்மா ஞாபகம் வந்துவிடும் என்ற காரணத்தினால் அவர்கள் தனது சொந்த குழந்தைகளை அழைத்து எங்களை இனிமேல் அப்பா அம்மா என்று சொல்லக்கூடாது என்று தனது பிள்ளைகளிடம் கூறினர். தனது பிள்ளைகள் ஏன் அப்பா ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு அந்த அப்பா நீங்கள் எங்களை அப்பா அம்மா என்று உரிமையுடன் கூப்பிடும் போது அந்த பிள்ளைகளுக்கும் நம்ம அம்மா அப்பா இருந்திருந்தால் நம்மளும் அவர்களிடம் பாசமாக இருந்திருக்கலாம் என்று அவர்களுக்கு ஒரு ஏக்கம் வந்துவிடும் அதனால் அவர்கள் முன் நீங்கள் எங்களை அப்பா அம்மா என்று கூறக்கூடாது புரிகிறதா என்று அப்பா இரண்டு மகள்களிடம் சொன்னார். மேலும் அந்த இரண்டு பிள்ளைகளும் அப்பா சொன்னதை புரிந்து கொண்டு சரி அப்பா இனிமேல் சொல்லவில்லை நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது என்று பதில் கூறினார். மேலும் அந்த இரண்டு பிள்ளைகளும் இவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் .மேலும் சூர்யாவின் சொந்த பிள்ளைகளையும் மற்றும் சீதாவின் அக்கா பிள்ளைகளையும் சூர்யாவின் சொந்த ஊரில் உள்ள விடுதியில் சேர்த்து விட்டார் .பின்னர் சீதாவின் அக்காவின் மூத்த பிள்ளை ஒழுக்கமற்ற செயல்களை செய்ததால் அந்த விடுதியில் இருந்து அழைத்துச் செல்ல அலைபேசியில் அழைப்பு வந்தது சூர்யாவும் சீதாவும் பயத்தில் என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டு சொந்த ஊரில் உள்ள விடுதிக்கு சென்றனர் .அங்கு அவர் சொன்னார் இந்த பெண் ஒழுக்கமற்ற செயல்களை செய்து எல்லா பெண்களையும் கெடுக்கின்றன. இவர்களை உங்களுடன் கூட்டி செல்லுங்கள் இந்த ஒரு பிள்ளையை தவிர மற்ற பிள்ளைகளை மட்டும் எங்களுடன் இருக்கட்டும் என்று அங்கு உள்ள அதிகாரிகள் கூறின. அதற்கு ஏன் இப்படி செய்தாய் என்று சூரியா சீதாவின் அக்கா பிள்ளையான இன்பாவிடம் கேட்டார். இன்பா நான் எதுவும் செய்யவில்லை அப்பா அவர்கள் என்னை பொய் சொல்லி குறை கூறுகிறார்கள் என்று கூறினார் .அந்த அதிகாரிகள் எங்களுக்கு இந்த பிள்ளை வேண்டாம் மேகலா மட்டும் எங்களுடன் இருக்கட்டும் என்று கூறினார். சீதா அக்காவின் மூத்த பிள்ளையை மட்டும் அவர் அழைத்து செல்ல சொன்னார். பின்னர் இரண்டாவது பிள்ளையான விசா என்பவள் நான் எனது அக்காவுக்கு கூட தான் செல்வேன் அப்படி என்று கூறிக்கொண்டு அவளுடன் சென்று விட்டார் .மேலும் அவரை வேறு ஒரு விடுதியில் சேர்த்தனர் அந்த விடுதியில் உள்ள அமைப்பாளர்கள் பிள்ளைகளை கொடுமை செய்கிறார்கள் என்று சூர்யாவிற்கு அழைப்பு வந்தது .உடனே பதறிக்கொண்டு அந்த விடுதிக்கு சென்று அந்தப் பிள்ளை இரண்டு பேர்களையும் அழைத்து வந்தனர். பின்னர் வேறு ஒரு விடுதியில் அந்த இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து வந்தனர் அந்த விடுதியில் பிள்ளைகளையும் நல்லா பார்த்துக் கொண்டனர்.பின்னர் ஒரு கோடை விடுமுறை விட்டனர் பிள்ளைகள் நான்கு பேரும் தனது வீட்டிற்கு வந்தனர் பின்னர் அந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சீதா அவளது அண்ணன் வீட்டிற்கு குழந்தைகள் ஐந்து பேரையும் அழைத்து சென்றனர். அப்போது அண்ணன் மகனான தர்மன் என்பவரை சீதா அக்காவின் மூத்த பிள்ளை இன்பா விரும்பி வந்தால் அது சூர்யாவுக்கு தெரியவந்தது மேலும் சூர்யா கண்டித்து விடுமுறை முடிந்து விடுதிக்கு அழைத்து கொண்டு போய் விட்டனர் . பின்னர் அந்த மூத்த பிள்ளையான இன்பா என்பவள் சீதாவின் அண்ணன் மகனுக்கு தொலைபேசி மூலம் பேசி வந்தால் அந்த சீதாவின் அண்ணன் மகன் சீதாவிற்கு போன் செய்து அனைத்து விஷயங்களையும் கூறினார். பின்னர் சூர்யாவும் சீதாவும் அந்த விடுதிற்கு சென்று அந்த மூத்த பிள்ளையான இன்பாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இன்பாவின் தங்கையான விசாவை அதே விடுதியில் விட்டுவிட்டு வந்தனர். மேலும் இன்பா வேறு வழியில் போய்விடக் கூடாது என்பதற்காக வேற ஒரு நல்ல வரன் வந்து கொண்டிருக்கு என்று சூர்யா சீதாவிடம் கூறினார். சீதா சரிங்க நீங்க சொன்ன அந்த பையனுக்கு இன்பாவை திருமணம் செய்து வைத்து விடலாம் என்று சூர்யாவிடம் பேசிவிட்டு இருவரும் கலந்து பேசிக்கொண்டு அந்த பையனின் அப்பாவிடம் கூறினர் .பின்னர் சூர்யாவின் வீட்டிற்கு அவர் சொன்ன அந்த மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண்ணை பார்க்கிறார் பார்த்துவிட்டு எங்களுக்கு பெண்ணை பிடித்து விட்டன. திருமணத்தை நடத்தி விடலாம் என்று சூர்யாவிடமும் சீதாவிடமும் கூறிவிட்டு அவர்கள் சென்று விட்டனர் பின்னர் ஒரு வாரத்தில் இன்பாவை திருமணம் செய்து வைப்பதற்காக அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் சூர்யாவும் சீதாவும் ஒரு விநாயகர் கோவிலில் இன்பாவிற்கு கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து வைத்தார்.